ADS

AD

Wednesday, April 15, 2009

வருடம் என்றும் சித்திரையிலே


என்னதான் சித்திரையை திராவிடக் கூட்டம்

பின்தள்ளி விட்டாலும்

வண்ணமிகு வருடம் என்றும் சித்திரையிலே தான்

பத்திரமாய் பிறக்கிறது

விரோதி வருடம் பெயரால் பயம் காட்டினும்

குணத்தால் நயமே காட்டும் என்பர்

பிறந்திருக்கும் புது வருடம்

நலம் சேர்க்கட்டும்; வளம் சேர்க்கட்டும்

வாழ்கையின் பாதைக்கு ஒளி சேர்க்கட்டும்

புகழ் சேர்க்க வரும் புது வருடத்தில்

தாய் தமிழ் வளரட்டும் தாலாட்டு பாடட்டும்

தாய் மண்ணை வளர்க்கின்ற

தலைவர்கள் கிடைக்கட்டும்

பண்பாட்டை கொண்டுள்ள தமிழர் கூட்டம்

பணத்திற்கு மட்டும் பண் படாமல்

மனத்தையும் குணத்தையும் கொண்டாடட்டும்

மனம் மலரட்டும் மயக்கம் அழியட்டும்

வாழும் காலம் எல்லாம் வளம் வந்து சேரட்டும்.

நன்றி. திரு.இராமராமநாதன் அவர்கள் பாரத் ரி இன்சூரன்ஸ்


No comments: