ADS

AD

Friday, August 14, 2009

யாருக்கு சுதந்திரம்?



நம்மளுக்கு சுதந்திரம் கிடைச்சாச்சு ஆகஸ்ட் 15 1947 லில்

ஆனா

உண்மையான சுதந்திரம் யாருக்கு கிடைத்தது?


வட்டிக்கு பணம் கொடுக்கும்

பண முதலைகளுக்கு......


அசையா சொத்துக்கள் சேர்க்கும்

அரசியல்வாதிகளுக்கு....


லஞ்சம் வாங்குற அரசு,

காவல்துறை அதிகாரிகளுக்கு....


பெண்களை திருட்டுத்தனமாக

ஆபாச படம் எடுப்பவர்களுக்கு....


விவாகரத்து பண்ணாமல்

மறுமணம் புரிபவர்களுக்கு.....



கல்விக்கு அளவுக்கு மீறி

கட்டணம் வசூலிப்பவர்களுக்கு....


கட்டணமில்லாமல் அரசு

வசதிகளை அனுபவிப்பவர்களுக்கு....


வாய்தா வாங்கி

ஏ சி சிறையில் தூங்கும் `நல்லவர்`களுக்கு.....


கலப்படத்தில்

கல்லாவை நிரப்பும் கயவர்களுக்கு....


தேர்தலில் கள்ள ஓட்டு ப்போடும்

விசுவாசிகளுக்கு...


சாதிகளில்லையடி பாப்பான்னு படிச்சு டாக்டராகி

சாதிக்கட்சி நடத்துபவர்களுக்கு.....


காவல் துறையின் காவலோடு?

ரேஷன் அரிசி கடத்துபவர்களுக்கு....


ஆபாசத்தை தூண்டும் எழுத்துக்களை

வெளியிடும் பத்திரிக்கைகளுக்கு....


சிறார்களை பணியிலமர்த்தும்

நிறுவனங்களுக்கு....


மதவெறியில் ரயில்,பேருந்துகளை

எரிப்பவர்களுக்கு....


சாமியின் பேரில் உலாவரும்

போலிச்சாமியார்களுக்கு....


இவர்கள் மட்டுமே இச்சுதந்திரத்தை அனுபவிக்கிறார்கள்



நன்றி:http://priyamudanvasanth.blogspot.com/2009/08/blog-post_14.html

இந்தியச் சுதந்திரம்



வெள்ளைக்காரனிடம்
வாங்கி
வெள்ளைக்காரியிடம்
கொடுத்துவிட்டோம் !

thanks to : http://manavili.blogspot.com
நன்றி:கவிதை திரு.சா.வீரையாஅவர்களால் எழுதப்பட்டது.

Thursday, August 6, 2009

இறை உருவங்களுக்கான அணிகலன்கள்

இந்துமத வழிபாட்டுத் தலங்களில் அமைக்கப்பட்டிருக்கும் இறை உருவங்களுக்கு அணிகலன்களாக மகுடம், குண்டலம், கண்டி, ஆரம், கேயூரம், யக்ஞோபவிதம், உதரபந்தம், சன்னவீரம், கடிசூத்திரம், ஊருமாலை, கண்டமாலை முதலியவை பெரும்பாலும் அமையப் பெற்றிருக்கும்.

இவற்றில் மகுடமானது தலைக்கு மேல் அணியப்படுவதாகும். இது கிரீட மகுடம், கரண்ட மகுடம், சடா மகுடம், ஜீவால மகுடம் எனப் பலவகைப்படும். இவற்றில் திருமாலின் தலையில் இடம் பெறுவது கிரீட மகுடமாகும். தேவியர் மற்றும் முருகன் கணபதி ஆகியோர்களுக்கு அமைக்கப்படுவது கரண்ட மகுடமாகும். சடையையே மகுடம் போல் அமைப்பது சடா மகுடம் எனப்படும். சடா மகுடம் பெரும்பாலும் சிவனுக்கே அமைக்கப்படும். மாரியம்மன், காளி முதலான இறை உருவங்களுக்கு தீக்கிரீடம் எனப்படும் ஜீவால மகுடம் இடம் பெறும்.

அடுத்ததாக, காதில் அணியப்படும் அணிகலனைக் குண்டலம் என்பர். இது பத்ர குண்டலம், மகர குண்டலம் என இரண்டு வகைப்படும். இதில் விஷ்ணுவுக்கு இட்ம்பெறும் காதணிகளை மகர குண்டலம் என அழைப்பர். சிவபெருமானது காதணிகளாக வலது காதில் பத்ர குண்டலமும், இடது காதில் தோடும் இடம் பெறும். சிவபெருமானின் இடதுபுறப் பாதி உடல் சக்தியின் அம்சமாகக் காட்டப்படும் புராண மரபை ஒட்டியே இவரது இடது காதில் தோடு இடம் பெறுகிறது.

அணிகலன்களில் கண்டிகை என்பதும் கண்டமாலை என்பதும் கழுத்தை ஒட்டி அமையும் அணிகலன்களாகும். ஆரம் என்பது கழுத்திலிருந்து மார்பு வரை தொங்கும் மாலையாகும். கேயூரம் என்பது மேற்கையின் நடுவில் அணியப் பெறுவதாகும். யக்ஞோபவிதம் எனும் பூணூல் இடது தோளிலிருந்து வலப்புற இடுப்பு வரை காணப்படும் அமைப்பாகும். மார்பிற்குக் கீழும், உந்திக்கு மேலும் அணியப்படும் பட்டையான அணிகலனே உதரபந்தம் எனப்படும். ஒன்றையொன்று குறுக்கிட்டுச் செல்லும் இரு பூணூல்களைப் போன்ற அமைப்பு சன்னவீரம் எனப்படும். இது வீரத்துடன் தொடர்புடைய ஆண்,பெண் தெய்வங்களுக்கு அணிவிக்கப்படும். இதற்கு உதாரணமாக, சுப்ரமண்யர், இந்திரன், தடாதகைப்பிராட்டி ஆகிய இறையுருவங்களைக் கூறலாம். கடிசூத்திரம் என்பது ஒட்டியானம் போன்ற அமைப்பினை உடையது. இதன் நடுவில் சிங்கம் அல்லது யாளிமுகம் அமைக்கப்படும். சிலம்பு எனும் அணிகலன் மகளிர்க்கும், கழல் எனும் அணிகலன் ஆடவருக்கும் உரியவை.

இறையுருவங்களுக்கு அணிவிக்கப்படும் அணிகலன்களை

1. தலையணி வகை

2. கழுத்தணி வகை

3. காதணி வகை

4. மூக்கணி வகை

5. கையணி வகை

6. கை விரலணி வகை

7. இடையணி வகை

8. துடையணி வகை

9. பாத அணி வகை

10. கால் விரலணி வகை

என்றும் வகைப்படுத்தப்பட்டுள்ளது.

நன்றி: டாக்டர் அம்பை மணிவண்ணன் எழுதிய கோயில் ஆய்வும் நெறிமுறைகளும்

Monday, August 3, 2009

மாரடைப்பு வருமா? ஒரே ஒரு சோதனை!!

திரு. தேவன் மாயம், காரைக்குடி அரசு மருத்துவர் அவர்களது http://abidheva.blogspot.com வலைத்தளத்திலிருந்து

கொலெஸ்ட்ரால் அல்லது கொழுப்புச்சத்து நம் உடலுக்குக் கேடானது என்பது நம் அனைவருக்கும் தெரியும்.

தற்போது உடல் பருமன்,இதயநோய், நீரிழிவு நோய் ஆகிய மூன்றும் ஒன்றுடன் ஒன்று கை கோர்த்து நம் உடலுக்கு கேடு விளைவிக்கின்றன.

கொலெஸ்ட்ரால் குறைவாக இருந்தால் மாரடைப்பு போன்ற இதயப் பிரச்சினைகள் வராதா?

எனக்கு கொலெஸ்ட்ரால் சரியான அளவு உள்ளது. எனக்கு மாரடைப்பு வராதுதானே? என்றெல்லாம் நாம் கேட்கலாம்.

முன்பு ஆம் என்று சொல்லியிருக்கலாம். ஆனால் தற்போது அப்படி இல்லை..

ஆம்.. தற்போதைய ஆய்வின்படி திடீர் மரணம் சம்பவிப்பதில் 30% பேர் முதல் மாரடைப்பால் மரணமடைகிறார்கள் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதாவது அதற்கு முன் அவர்களுக்கு இதய நோயோ கொழுப்புச்சத்தோ இருந்ததில்லை.

அப்படியாயின் இதயநோய் வருமா வராதா என்று கண்டுபிடிப்பது எப்படி? என்று கேட்கலாம்...

அதற்கு பதிலும் தற்போது கிடைத்துள்ளது.

கொலெஸ்ட்ரால் கொழுப்பு வெண்ணை போல் பிசுபிசுப்புடன் ஒட்டும் தன்மையுள்ளது. இந்த கொலெஸ்ட்ராலில் Total cholesterol ( மொத்த கொழுப்பளவு) பொதுவாக கீழ்கண்ட வகைகள் உள்ளன. அவற்றைப் பற்றித் தெரிந்து கொள்ள அவற்றைச் சுட்டியாகவே தந்துள்ளேன்.

உயர் அடர்த்தி கொழுப்பு (உடலுக்கு நலம் தருவதால் நல்ல கொழுப்பு என்று அழைக்கப்படுகிறது) High density lipoprotein cholesterol (HDL-C)

குறந்த அடர்த்தி கொழுப்பு( உடலுக்குக் கேடு விளைவிப்பதால் தீய கொழுப்பு என்று கூறப்படுகிறது). Low density lipoprotein cholesterol (LDL-C)

ட்ரை கிளிசரைடு கொழுப்பு Triglycerides

மிகக் குறைந்த அடர்த்தி கொழுப்பு Very low density lipoprotein cholesterol (VLDL-C).

குறைந்த அடர்த்தி கொழுப்பு உடலுக்குக் கேடு விளைவிப்பதால் தீய கொழுப்பு என்று கூறப்படுகிறது. Low density lipoprotein cholesterol (LDL-C).

ஆகையால் குறைந்த அடர்த்தி கொழுப்பு இரத்தத்தில் குறைவாக இருந்தால் மாரடைப்பு வராது என்று கூறப்பட்டு வந்தது.

கொழுப்புகள் பொதுவாக நீரில் கரையாது. இரத்ததில் அதனால் சரியாக பயணிக்க முடியாது. ஆகையால் இவை வேறு ஒரு பொருளால் போர்த்தப்பட்டு(கவச வண்டி என்று நாம் சொல்லிக்கொள்வோம்) இரத்தத்தில் பயணிக்கின்றன.

இப்படி குறைந்த அடர்த்தி கொழுப்புக்களை ஏற்றிச் செல்லும் கலனாக LDL-P கவச வண்டி செயல்படுகிறது.

கொலெஸ்ட்ரால் குறைவாக இருந்தாலும் அதை ஏற்றிச்செல்லும் L D L- P க்களின் எண்ணிக்கை இரத்தத்தில் அதிகமாக இருந்தால் அது இரத்தக்குழயில் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தும். இந்த நெரிசலில்தான் இரத்தக்குழாய் சேதமடைந்து(Atheroscerosis) விடுகின்றன.


இதுவே மாரடைப்புக்குக் காரணமாக அமைகிறது.

விடை இப்போது தெரிகிறதா? ஆம். LDL-P க்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தால் மாரடைப்பு வாய்ப்புகள் குறைவு என்று கண்டுபிடித்துள்ளார்கள். இந்த புதிய சோதனையின் பெயர் NMR LIPID PROFILE .

ஆயிரக்கணக்கான மக்கள் வருடந்தோரும் இதய நோயால் இறக்கின்றனர். இந்த புதிய சோதனைகளின் மூலம் இதை அறிந்தால் நாம் நம் இன்னுயிரைக் காப்பாற்றிக் கொள்ளலாமே!!!