ADS

AD

Friday, August 14, 2009

யாருக்கு சுதந்திரம்?



நம்மளுக்கு சுதந்திரம் கிடைச்சாச்சு ஆகஸ்ட் 15 1947 லில்

ஆனா

உண்மையான சுதந்திரம் யாருக்கு கிடைத்தது?


வட்டிக்கு பணம் கொடுக்கும்

பண முதலைகளுக்கு......


அசையா சொத்துக்கள் சேர்க்கும்

அரசியல்வாதிகளுக்கு....


லஞ்சம் வாங்குற அரசு,

காவல்துறை அதிகாரிகளுக்கு....


பெண்களை திருட்டுத்தனமாக

ஆபாச படம் எடுப்பவர்களுக்கு....


விவாகரத்து பண்ணாமல்

மறுமணம் புரிபவர்களுக்கு.....



கல்விக்கு அளவுக்கு மீறி

கட்டணம் வசூலிப்பவர்களுக்கு....


கட்டணமில்லாமல் அரசு

வசதிகளை அனுபவிப்பவர்களுக்கு....


வாய்தா வாங்கி

ஏ சி சிறையில் தூங்கும் `நல்லவர்`களுக்கு.....


கலப்படத்தில்

கல்லாவை நிரப்பும் கயவர்களுக்கு....


தேர்தலில் கள்ள ஓட்டு ப்போடும்

விசுவாசிகளுக்கு...


சாதிகளில்லையடி பாப்பான்னு படிச்சு டாக்டராகி

சாதிக்கட்சி நடத்துபவர்களுக்கு.....


காவல் துறையின் காவலோடு?

ரேஷன் அரிசி கடத்துபவர்களுக்கு....


ஆபாசத்தை தூண்டும் எழுத்துக்களை

வெளியிடும் பத்திரிக்கைகளுக்கு....


சிறார்களை பணியிலமர்த்தும்

நிறுவனங்களுக்கு....


மதவெறியில் ரயில்,பேருந்துகளை

எரிப்பவர்களுக்கு....


சாமியின் பேரில் உலாவரும்

போலிச்சாமியார்களுக்கு....


இவர்கள் மட்டுமே இச்சுதந்திரத்தை அனுபவிக்கிறார்கள்



நன்றி:http://priyamudanvasanth.blogspot.com/2009/08/blog-post_14.html

No comments: