ADS

AD

Saturday, June 20, 2009

பெண் சிசுக்கொலைகளுக்கு வித்திடாதீர்கள்




ஏதோ ஒரு நூற்பாலையில்  காசோலைகள் திரும்பிவிட்டன அல்லது பணம் கொடுக்கவில்லை என்று சொல்லி ஒட்டு மொத்த ஜவுளி ஆலைகளையே அந்த பார்வை பார்ப்பது சில பத்திரிக்கைகள் மட்டுமே செய்து வந்தன. ஏனோ தற்போது தினமணியும் அந்த அளவுக்கு கீழே இறங்கி விட்டது. அதாவது இது சுமங்கலித்திட்டம் என்கிறார்களே அது எங்கேயும் கிடையாது. இதெல்லாம் பத்திரிகைகளும் சில தொழிற்சங்கங்களும் கண்டுபிடித்த வார்த்தை.

 

எங்கோ ஒரு குக்கிராமத்தில் படிக்க இயலாத பெண்களை அழைத்து வந்து ஆலைகளில் வேலைக்கு சேர்ப்பது ஒவ்வொரு பெண்ணின் பெற்றோர்களே. அவர்கள் ஒன்றும் தமது பெண்குழந்தைகளை பணம் பெற்றுக்கொண்டு கொத்தடிமைகளாக விட்டுச்செல்வதில்லை. வருகிறார்கள். ஆலையைப்பார்க்கிறார்கள். அங்குள்ள சக தொழிலாளர்களிடம் பலமுறை விசாரிக்கிறார்கள். அதற்கப்புறம் தான் தனது பெண்குழந்தகளை விட்டுசெல்கிறார்கள்.

 

எங்கோ தென்மாவட்டத்தில் உள்ள ஒரு பெண் தினமும் கோவை வந்து ஆலை வேலை செய்து கொண்டு தினமும் தன் வீட்டுக்கு  திரும்பிச்செல்ல முடியாது. ஆகவே தான் அவர்கள் ஒரு குழுவாக வந்து ஆலைப்பணி செய்ய வருகிறார்கள். இப்படி வரும் தொழிலாளர்களுக்கு ஆலை நிர்வாகம் உறைவிட வசதி செய்து தருவதில் என்ன தவறு இருக்கிறது? அவர்களுக்கு உணவு வழங்குவதில் என்ன தவறு இருக்கிறது? அவர்கள் தினசரி பெறும் சம்பளத்தில் ஒரு குறிப்பிட்ட அளவு அவர்கள் கைச்செலவுக்கு போக மீதம் இருப்பதை ஒருவருடம் கழித்தோ, இரண்டு வருடம் கழித்தோமூன்று வருடம் கழித்தோ தரும்போது அது 30000 அல்லது 40000 ஆகப்பெருகித்தான் இருக்கும்.

 

இதற்கு மேலும் அவர்கள் பணிபுரிந்தாலும் இதே நிலைதான். அவர்கள் தொடர்ந்து பணிபுரிய விருப்பப்பட்டால் ஆலை நிர்வாகங்கள் அவர்களை நிரந்தரத் தொழிலாளர்களாக ஆக்க தயங்குவதில்லை. ஆனால் அவர்கள் எங்கோ ஒரு கிராமத்திலிருந்து வருகிறார்கள். ஒரு குறிப்பிட்ட அளவு சேமிப்பு கிடைத்ததும் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று திருமணம் செய்துகொண்டு தங்கள் வாழ்க்கையைத் துவங்குகிறார்கள்.

 

இப்படியெல்லாம் வாழ்வாதாரம் இருப்பதால் தான் இப்போது பெண்சிசுக்கொலைகளே இல்லை என்ற நிலை வந்திருப்பதை யாரேனும் மறுக்க முடியமா?

 

குறந்தபட்சம் பத்தாம் வகுப்பு பரை படித்திருப்பவர்களுக்கே வேலைவாய்ப்பு என்ற நிலை இருப்பதால் இப்போதெல்லாம் பெண்குழந்தைகளின் கல்வியறிவு சதவீதம் அதிகரித்திருப்பதை யாரும் மறுக்க முடியுமா?

 

பள்ளிப்படிப்பு முடித்ததும் மேற்கொண்டு படிக்க முடியாமல் எத்தனை பெற்றோர்கள் கஷ்டப்படுகிறார்கள்

 தெரியுமா?

 

அந்த பெண் குழந்தைகளை திருமணம் ஆகும் வரைக்கும் வீட்டில் வைத்துக்கொண்டு மடியில் நெருப்பைக் கட்டியவாறு இருந்த நிலை இப்போது இல்லையே.  காரணம் இந்த ஆலை வேலை தான்.

 

இவர்களுக்கு நியாயமான ஊதியம், சுகாதாரமான தங்குமிடம், போதிய ஓய்வு, விபத்து மற்றும் நோய்க்கான செலவுத்தொகை ஆகியவற்றை எல்லா ஆலைகளுமே இலவசமாக போட்டி போட்டுக்கொண்டு வழங்குகின்றன. ஏனென்றால் ஆட்கள் கிடைப்பது அவ்வளவு அரிதாக உள்ளது.



இங்கு ஆலையில் உள்ள நேரம் போக அவர்களுக்கு இலவசமாக யோகா, தையல் பயிற்சி, கூடை பின்னுதல் போன்ற கைத்தொழில்களும் நிறைய ஆலைகளில் கற்றுத்தரப்படுகிறது. இவற்றையெல்லாம் அவர்கள் கிராமத்தில் நினைத்துப்பார்க்ககூட முடியாது. அவர்கள் திருமணத்திற்குப்பின்னும் இதனால் பயன் பெறுகிறார்கள். இங்கு வந்து சுகாதாரமாக இருந்து பழகி விடுகின்றார்கள். அவர்களது கிராமத்து வாழ்க்கைமுறையை இங்கு வந்து மாற்றிக்கொண்டு இவர்கள் பண்பட்டு செல்கிறார்கள். அவர்களது நடை உடை பாவனைகளே மாறி ஒரு புதுப்பொலிவுடன் இருப்பதை பார்த்து செல்வதை அவர்களது பெற்றோர் மிக்க மகிழ்ச்சி அடைகிறார்கள்.

 

இப்படி நிலை இருக்க ஏதோ ஒரு சம்பவத்தைகாட்டி ஒட்டுமொத்த ஆலைகளையும் எடைபோடுவதை பத்திரிக்கைகள் நிறுத்தவேண்டும்.

 

ஏதோ ஒரு இடத்தில் நடப்பதைவைத்து அனைவரையும் அந்த லிஸ்டில் சேர்க்காதீர்கள்.

 

ஏதோ ஒரு பத்திரிக்கை மஞ்சள் பத்திரிக்கயாக இருப்பதை வைத்துக்கொண்டு நாங்கள் அனைத்துப் பத்திரிக்கைகளையும் மஞ்சள் பத்திரிக்கைகள் என விமர்சனம் செய்வதில்லயே?

 

இந்த சுரண்டுதல், ரத்தத்தை உறுஞ்சுதல், என்கின்ற ஹைதர் கால பல்லவி பாடுவதை விட்டொழியுங்கள்.

 

பத்திரிக்கைகளும், மீடியாக்களும் தங்களது நிருபர்களை ஒவ்வொரு அரசு அலுவலகத்துக்கு அனுப்புங்கள். அங்கே பாமரன் படும் பாட்டை கேளுங்கள். சான்றிதழ்களுக்காக திரும்பத்திரும்ப ஒரே அலுவலகத்துக்கு மாறி மாறி அலையும் அவல நிலையை பாருங்கள். லஞ்சம் வாங்கும் பேய்களை விரட்டுங்கள். அந்த அதிகாரிகளின் தோலை உரியுங்கள்.

 

அதைவிட்டு இப்படியெல்லாம் எழுதி ஏழைப்பெண்களின் வேலை வாய்ப்பினில் மண்ணைத்தூவாதீர்கள். நேராகச் செல்லுங்கள். ஆலையில் பணிபுரியும் பெண்களைக் கேளுங்கள் ஏதாவது தவறு இருந்தால் ஆலை நிர்வாகத்திடம் சொல்லி நல்லது செய்யப்பாருங்கள்.

 

மறுபடியும் பெண் சிசுக்கொலைகளுக்கு வித்திடாதீர்கள்

Monday, June 1, 2009

கைநிறைய சம்பளம்.....கை நீட்டுதல் குறையுமா?

எதிர்பார்த்தது போலவே அரசு ஊழியர்கள் சம்பளம் அவர்களே எதிர்பார்க்காத அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது...

 

ஒரு சத்துணவு ஊழியரின் சம்பளம் அரசு மருத்துவமனையில் ஐந்து ஆண்டு காலம் சிறப்பாகப் படித்து பயிற்சி மருத்துவராக இருப்பவரின் சம்பளத்தைக் காட்டிலும் ஏறத்தாழ இரண்டு மடங்காக இருக்கலாம்.....

 

அரசு மருத்துவர்கள் தேர்தல் பணிக்கா செல்லப் போகிறார்கள்...

பின் அவர்களுக்கு எதற்கு சம்பள உயர்வெல்லாம்......?

 

சரி... சந்தோசப்படுவோம்....

ஆனால் இனிமேலாவது இந்த வருவாய் அலுவலகம், வணிகவரி அலுவலகம், காவல்துறை இவற்றில் பணிபுரிவோர் (ஒரு சிலர் தவிர)கை நீட்டாமல் இருப்பார்களா...?

 

இல்லை …. இந்த சம்பள உயர்வு போதாதென்று இன்னும் லஞ்சம் கேட்பார்களா...

 

ஆண்டவனுக்கே ( ஆள்பவர்க்கே) வெளிச்சம்...

 

Saturday, May 16, 2009

ஆயினும் கனவு காண்போம்.

 

தேர்தல் முடிந்தது

 

எதிர்பார்த்த,  சிலருக்கு எதிர்பாராத முடிவுகள் வந்துவிட்டன

 

இனி இந்தியாவில் பிறந்தவர்கள் மட்டுமல்ல, இத்தாலியில் பிறந்தவர்கள் கூட பிரதமர் ஆகலாம் என இந்திய நாட்டின் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

 

கனவு தகர்ந்தது........

 

பிரதம மந்திரியாக திரு எல்.கே.அத்வானிவருவார் என்ற என் போன்றோரின் ஆசைக்கனவு (எதுக்கு உங்களுக்கு இந்த வெட்டி ஆசை?) தகர்ந்தது..

 

இலங்கை வாழ் தமிழர்களுக்கு ஒரு விடிவுகாலம் பிறக்கும் என்ற நம்பிக்கை தகர்ந்தது

 

ஸ்விஸ் வங்கியில் போடப்பட்டுள்ள லட்சக்கணக்கான கோடிகள் மீட்கப்படும் என்ற கனவு தகர்ந்தது

 

கோவை மாவட்டத்திற்கு தமிழக அரசின் பார்வை கிடைக்கும் என்ற கனவு தகர்ந்தது

 

ஆயினும் கனவு காண்போம்.

 

நரேந்திரமோடி பிரதமர் ஆகலாம்...

 

வருண் காந்தி ஆகக்கூடும்...

 

இனி...

 

அரசு ஊழியர்க்கு சம்பளம் உயரலாம்...

 

இலவச திட்டங்கள் மீண்டும் வரலாம்...

 

ஜெயலலிதா அம்மையார்க்கு இனியாவது தன் உயர்வு மனப்பான்மை (அகம்பாவம்?) குறையும் என எதிர்பார்க்கலாம்

 

மருத்துவர் ராமதாஸ் தனது மக்கள் தொலைக்காட்சியில் விடிய விடிய ஒளிபரப்பிய இலங்கை வாழ் தமிழர்கள் படும் இன்னல்கள் இனி மறக்கப்படலாம்

 

மருத்துவர் அன்புமணி மருத்துவ மாணவர்களை சோதித்ததை நினைவு கூர்ந்து அவர்களுக்காக இனி போராடலாம்.

 

பொறியியல் கல்லூரியில் படித்து விட்டு (அரசு வழங்கும் குறைந்த கட்டணத்தில்) அதிக சம்பளத்திற்கு மேலை நாடுகளுக்கு சென்று விடும் மாணவர்களது கல்விக்கட்டணத்தை திரும்பச் செலுத்தச் சொல்லி போராடலாம்.

 

பயிற்சி மருத்துவ மாணவர்களுக்கு தற்போது தரப்படும் கடைநிலை ஊழியர்களைவிட குறைவாக தரப்படும் ஊதியத்தொகையை உயர்த்தி தர போராடலாம்

 

வைகோ இனி கட்சி அரசியல் நடத்தாமல் ஒரு தமிழர்நல  இயக்கமாக மாற்றி சேவை செய்யலாம்

 

தீவிரவாதிகள் ஹாய் ஆக உலாவரலாம்...

 

கம்யூனிஸ்டுகள் வழக்கம்போல் அமெரிக்க ஏகாதிபத்தியம், மதவாதம் என்ற தலைப்புகளில் வரும் ஐந்தாண்டுகளுக்கு பேசிக்கொண்டிருக்கலாம்.

 

லல்லுபிரசாத் மாட்டுப்பண்ணையை மீண்டும் துவங்கலாம்.. பால்பண்ணையில் காலை 3.30 மணிக்குள் வாங்கவரும் பால்விலை லிட்டர் 15 என்றும் அதன் பின்னர் தாட்கல் முறையில் மட்டுமே கிடைக்கும் பால் லிட்டர் 55 ரூபாய் என்றும் நிர்ணயம் செய்து லாபம் கொழிக்க வைத்து பெயரெடுக்கலாம்.

 

 

தமிழ்மக்கள் எதைப்பற்றியும் கவலைப்படாமல் இனி ஒரு மூன்றாண்டுக்கு அடுத்த சட்ட மன்ற தேர்தல் வரும் வரை அவரவர் வேலைகளை பார்க்கலாம்.

 

 


Saturday, April 25, 2009

ஹிட்லர் மறு அவதாரம்.............
















இந்த படங்களைப்பாருங்கள்

 ஸ்ரீலங்காவில் நடப்பது என்ன ?


இலங்கை ராணுவம் மக்கள் குடியிருப்பில்  வெடி குண்டு போட்ட பின்...


இந்தப் பிஞ்சுக்குழந்தை  இவர்களை என்ன செய்தது?


இவை தமிழ் பேசும் குழந்தைகள், அதுதான் இலங்கை ராணுவத்திற்குப்பிடிக்கவில்லை.  ஆகவே தான் இந்தக்கொலை...

  இது ஏற்றுக்கொள்ளப்படக்கூடியதா...?

  இவற்றை எந்த இந்தியப்பத்திரிக்கைகளாகட்டும், உலகப்பத்திரிக்கைகளாகட்டும் யாரும் வெளியிடுவதில்லை.

  இது ஜனவரி 2009ல் இலங்கை மூங்கிலாறு பகுதியில் மக்கள் மீது தொடுத்த தாக்குதல்



ஏறத்தாழ பத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் கொல்லப்பட்டன... இதை கேள்வி கேட்க யார் உள்ளார்?

 இதோ இந்த குழந்தை செய்தது என்ன?


செய்த ஒரேதவறு தமிழினத்தைசார்ந்தது மட்டுமே.

 இதோ இந்த கர்ப்பிணிப்பெண் இரக்கமின்றி கொல்லப்பட்டதைப்பாருங்கள்...


இது உலகின் மிக ஈவு இரக்கமின்றி செய்யப்பட்ட தாக்குதல். கூட எட்டு மாத கருவும் சேர்ந்து கொல்லப்பட்டதே..

 சேய் அந்தப்பெண்ணின் உடல் மீது... பிணமாக....

 இதோ 13 வயது பள்ளி மாணவன்...


எங்கே அந்தக்குழந்தையின் தலை...?

 ஐ.நா.சபையால் என்ன பயன்..?

 

900 குழந்தைகள் உட்பட 3812 ஏதும் அறியா அப்பாவித்தமிழ் மக்கள் இலங்கை ராணுவத்தால் கடந்த மூன்று மாத காலத்தில் கொலை செய்யப்பட்டுள்ளார்கள்.

 ஐ.நா. அறிக்கையின்படி தினமும் 42 தமிழ் மக்கள் இலங்கை ராணுவத்தால் கொல்லப்படுகிறார்கள்.

 

இலங்கை அரசு வன்னிப்பகுதிக்கு எந்த செய்தியாளர்களையும் அனுமதிப்பதில்லை.


அனைத்தும் திட்டமிட்டு மறைக்கப்பட்டு வருகின்றன..

துணை போகின்ற இந்திய அரசியல் வாதிகள் யாராய் இருப்பினும்


காலம் கண்டிப்பாக உங்களை சும்மாவிடாது.....


கலைஞர் தந்தி அடிப்பதை தவிர வேறு என்ன செய்யலாம் ...?

 

- பாஸ்கரன் சுப்ரமணியன்

லங்கை அரசு போர் நிறுத்தத்தை அமல்படுத்த இந்திய அரசு வலியுறுத்த வேண்டும் என்று கோரி மத்திய அரசுக்கு 2 முறை தந்தி அடித்தார் நமது தமிழின தலைவர் அவர்கள்.

அவருக்காக கோரிக்கை அனுப்ப சில பல எளிய வழிகள்...

 

(1) குடும்பத்துடன் நடை பயணமாக டெல்லி சென்று மனு கொடுக்க போவதாக அறிவிக்கலாம். (வருட கணக்கில் பிரச்னையை இழுக்க சிறந்த வழி)

 

(2) அமைச்சர்களுடன் சைக்கிள் பயணமாக டெல்லி சென்று மனு கொடுக்க போவதாக கூறலாம்.

 

(3) மாட்டு வண்டி கட்டிக்கொண்டு டெல்லி செல்ல இருப்பதாக கூறலாம்.

 

(4) புறா வழி தூது அனுப்ப எண்ணுவதாக செய்தி வெளியிடலாம்.

 

(5) நுங்கு வண்டி செய்து அதனை உருட்டிய படி செல்வதாக கூறலாம்.

 

(6) சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் மராத்தான் ஓட்டம் டெல்லி வரை ஓட இருப்பதாக கூறலாம்.

 

(7) தங்க நாற்கர சாலையில் சைக்கிள் டயர் அடித்து உருட்டியபடி டெல்லி செல்லலாம்.

 

(8) வாடகை சைக்கிள் ரிக்சா பிடித்து டெல்லி சென்று மனு கொடுக்கலாம்.

 

இப்படி எதாவது ஒரு காரணத்தை கூறி ஒரு விஷயத்தை இழுக்க என்ன வேண்டுமானாலும் கூறலாம்.

 

இவரது நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தியா முழுதும் தொலைபேச ஒரு ரூபாய் மற்றும் ஐம்பது பைசா தொலைபேசி திட்டம் கொண்டு வந்ததாக தம்பட்டம் அடிக்கும் பெரியவருக்கு, இலங்கையில் தமிழருக்கு பேரிழப்பு ஏற்படும் போது இன்னும் தந்தி அடிக்கும் முறை மட்டுமே ஞாபகம் வருவது ஆச்சரியம் அளிக்கிறது.

 

இந்த கட்டுரையை பின்வரும் இணைய தளத்திலும் காணலாம். திரு.பாஸ்கரன் சுப்ரமணியம் அவர்களால் எழுதப்பட்டது.

http://youthful.vikatan.com/youth/baskaranarticle23042009.asp

இவரது பிற படைப்புகளைக்காண http://bashkaran.blogspot.com/ செல்லுங்கள்

Thursday, April 23, 2009

இந்த நோட்டு யாருக்கு வேண்டும்?

பிரபல பேச்சாளர் ஒருமுறை 200 பேர் கொண்ட கருத்தரங்கத்தில் உரையாற்றிக்கொண்டிருக்கையில் தன்னிடமிருந்த ஒரு ஐநூறு ரூபாய் நோட்டு ஒன்றை கையில் உயர்த்தியவாறு " இந்த நோட்டு யாருக்கு வேண்டும்?" என் வினவினார். கூட்டத்தினர் கைகளை மேலே உயர்த்தினர்.

 

"உங்களில் ஒருவருக்குத்தான் இந்த பணத்தை தரப்போகிறேன் " என்றவர் கொஞ்சம் பொறுங்கள் என்றவாறே கையில் இருந்த நோட்டை கசக்கியபின்  "இன்னும் இதை விரும்புவோர் உண்டா" எனக்கேட்டார். மீண்டும் அனத்து  கைகளும் மேலே  உயர்ந்தன.

 

"நல்லது" என்று சொல்லி அந்த பணத்தை தரையில் போட்டு தனது பூட்ஸ் காலால் நசுக்கி அதை கையில் எடுத்து மீண்டும் கேட்டார்  "தற்போது வேண்டுமா?"  இன்னும் உயர்ந்தன கைகள்.

 

அவர் சொன்னார். "நண்பர்களே.. இன்று ஒரு மதிப்பு மிக்க பாடத்தைக் கற்றுக்கொண்டீர்கள். நான் இந்த ஐநூறு ரூபாய் நோட்டை கசக்கினாலும், கீழே போட்டு மிதித்தாலும் அந்த நோட்டை விரும்பினீர்கள்... காரணம் அது என்ன செய்தாலும் அதன் மதிப்பை இழக்கவில்லை. அது ஐநூறு ரூபாய் ஆகத்தான் இருந்தது.

 

இது போலவே நமது வாழ்க்கையிலும் நாம் கீழே விழுகிறோம்... கசக்கப்படுகிறோம்... மிதிபடுகிறோம்... நாம் எடுக்கும் சில முடிவுகள் நமக்கு சாதகமானதாக இல்லாத சந்தர்ப்பமாகிவிடுகிறது.

 

ஆகவே நாம் எதற்கும் லாயக்கற்றவர்கள் என் இருந்து விடுகிறோம்.

ஆனால் அப்படியல்ல.

நாம்  நமது மதிப்பை என்றும் இழப்பதில்லை.

எந்த சூழ்நிலையிலும்...

 ஆமாம்... நமக்குள் ஒரு தனித்திறமை உள்ளது..

நமக்கென்று  தனி மதிப்பு உள்ளது

 

நன்றி. திரு, இராம ராமநாதன் அவர்கள்... பாரத் ரி இன்ஸூரன்ஸ்... கோவை.

Wednesday, April 15, 2009

வருடம் என்றும் சித்திரையிலே


என்னதான் சித்திரையை திராவிடக் கூட்டம்

பின்தள்ளி விட்டாலும்

வண்ணமிகு வருடம் என்றும் சித்திரையிலே தான்

பத்திரமாய் பிறக்கிறது

விரோதி வருடம் பெயரால் பயம் காட்டினும்

குணத்தால் நயமே காட்டும் என்பர்

பிறந்திருக்கும் புது வருடம்

நலம் சேர்க்கட்டும்; வளம் சேர்க்கட்டும்

வாழ்கையின் பாதைக்கு ஒளி சேர்க்கட்டும்

புகழ் சேர்க்க வரும் புது வருடத்தில்

தாய் தமிழ் வளரட்டும் தாலாட்டு பாடட்டும்

தாய் மண்ணை வளர்க்கின்ற

தலைவர்கள் கிடைக்கட்டும்

பண்பாட்டை கொண்டுள்ள தமிழர் கூட்டம்

பணத்திற்கு மட்டும் பண் படாமல்

மனத்தையும் குணத்தையும் கொண்டாடட்டும்

மனம் மலரட்டும் மயக்கம் அழியட்டும்

வாழும் காலம் எல்லாம் வளம் வந்து சேரட்டும்.

நன்றி. திரு.இராமராமநாதன் அவர்கள் பாரத் ரி இன்சூரன்ஸ்


Thursday, April 9, 2009

கடவுளை நம்புங்கள்

நீங்கள் கடவுளைப் பிரார்த்தனை செய்தவுடன் அது   நிறைவேற்றப்பட்டால்

கடவுள் உங்கள் நம்பிக்கையை அதிகப்படுதுகிறார்

 

சற்றே தாமதமாக நிறைவேறினால்,

கடவுள் உங்களின் பொறுமையின் வலிமையை அதிகரிக்கிறார்.

 

 

பிரார்த்தனை செய்தும் நிறைவேறவில்லையா?....

 

 

அதை உங்களாலேயே செய்துவிட முடியும் என

 

உங்களின் தன்னம்பிக்கையை அதிகரிக்கிறார்

 

 

... இந்த நல்ல மேற்கோளை மின்னஞ்சலில் அனுப்பி வைத்த பாரத் ரி இன்சூரன்ஸ், கோவை சுனிதாவிற்கு நன்றி

 

Beautiful Belief: If god answers your prayer, he’s increasing your faith. If he delays, he’s increasing your patience. If he doesn’t answer,he knows you can handle….

 

Thank you Ms.Sunitha, Bharat Re Insurance, Cbe.

Saturday, March 28, 2009

கருணாநிதிக்காக ராஜாத்தி அம்மாள் ஹோமம்


News from that’s tamil

கும்பகோணம்: முதல்வர் கருணாநிதி நலமுடன் இருக்க வேண்டும் என்பதற்காக, அவரது துணைவியார் ராஜாத்தி அம்மாள் திருக்கடையூர் கோவிலில் ஆயில்ய ஹோமம் செய்தார்.

கருணாநிதி மதம், சாதி, ஆன்மீகம் போன்ற நம்பிக்கையில் மாறுபட்ட கருத்து கொண்டவர். பெரியார் வழியில் நடப்பதாக அடிக்கடி பெருமையாக கூறிக் கொள்வார்.

இந்துக் கடவுள்கள் குறித்து அவர் முன்பு பேசியவை இன்றும் கூட விமர்சிக்கப்பட்டு வருகின்றன. அவரும் தனது விமர்சனங்களை நிறுத்தியதில்லை.

இந்த நிலையில் கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தி அம்மாள் கும்பகோணம் அருகில் உள்ள திருக்கடையூர் அமிர்தகேடஸ்வர் கோயிலுக்கு திடீரன வந்தார்.

அங்கு முதல்வர் கருணாநிதிக்கு நீண்ட ஆயுள் வேண்டி ஆயில்ய ஹோமம் கோவில் நந்தி மண்டபத்தில் விஸ்வநாத குருக்கள் தலைமையில் நடத்தப்பட்டது.

துணைவியார் ராஜாத்தி பெயரில் ஹோமம் நடந்தது. இரவு 7.30 மணியளவில் திருக்கடையூர் அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர் கோவிலுக்கு வந்து ஆயில்ய ஹோம பிரசாதத்தை ராஜாத்தி பெற்றுக் கொண்டார்.

அடுத்து எதிரிகளை வீழ்த்தும் வகையில் கும்பகோணம் அருகில் உள்ள பிரசித்தி பெற்ற அய்யாவாடி பத்ரகாளிஅம்மன் கோயிலிலும் விசேஷ பூசைகள் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றதாம்.

அமிர்தகடேஸ்வரர் கோவிலில் 60 வயது முடிந்தவர்களுக்கு சஷ்டியப்த பூஜை, 70 வயது முடித்தவர்களுக்கு பீமரத சாந்தி, 80 வயதுக்கு சதாபிஷேகம் மற்றும் நீண்ட கால ஆயுள் வேண்டி ஆயில்ய ஹோமம் நடத்தப்படுது வழக்கமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

User Comments

பதிவு செய்தவர்: eyefather பதிவு செய்தது: 28 Mar 2009 11:50 am

uyarthiru muthalvarukku, வணக்கம்.

நீங்கள் ஒரு பகுத்தறிவு கடல். ஏன் உங்கள் மீது ஆயுள் ஹோமம் ? உங்கள் Thiramaiikku ஓர் தகுதிக்கு நம்பிக்கையில்லையா?

பதிவு செய்தவர்: Raman பதிவு செய்தது: 28 Mar 2009 10:09 am

சொல்வது ஓன்று, செய்வதோ மற்றொன்று -- பேஷ் பேஷ்! கேட்கவே ரொம்ப நல்ல இருக்கு! பிராமணர்களையும் பிராமணீயத்தையும் கேவலமாக பேசிவிட்டு இப்போது பிராமணர்களின் வழிபாட்டு முறையை பின்பற்றுவது கழகங்களே பிராமணீயத்தை ஒப்புகொண்டதுக்கு சமம். மேலும் இதுவரை பேசியது அனைத்தும் பொய் என்பதிற்கு அத்தாட்சி இது. இனிமேலும் இந்த பொய் பேசும் முகவின் இந்து எதிர்ப்பு பேச்சுக்கள் மக்கள் மத்தியில் எடுபடாது. அரசன் அன்று கொல்லும், தெய்வம் நின்று கொல்லும் என்ற முதுமொழி உண்மை ஆகிவருகின்றது
.

பதிவு செய்தவர்: கண்மணி பதிவு செய்தது: 28 Mar 2009 09:08 am

ஹோமம் நைவேத்தியம் இது எல்லாம் கை கொடுக்குங்குளா அம்மா? பேசமா கட்சியை அதிமுகவோட இணைத்து விட்டால் போதும் முங்கிய திமுக மேல் எழுந்து விடும். தலைவர் 2 வருசம் சிஎம். அம்மா 2 வருசம் சிஎம் நம்ம இளம் கட்டிளம் காளை ஸ்டாலின் 1 வருசம்.. என்ன சொல்லிறீங்க. நம்ம பாலு அண்ணாச்சியை ஒரு அறிக்ககை விடசொல்லுங்க வெள்ளம் தலைக்குமேல் போகுது ஜான் போனால் என்ன மொளம் போனால் என்ன?

பதிவு செய்தவர்: வீரசிகாமணிக்காரன் பதிவு செய்தது: 27 Mar 2009 05:43 pm

பகுத்தறிவுக் கொள்கை கழகக் கண்மணிகளுக்குத் தான் பொருந்துமே தவிர மற்றவர்களுக்கு அல்ல. ஆகவே இவர் துணைவியார் செய்தது சரி என்றோ?, இது அத்தனையும் எதிர்க்கட்சிகளின் திட்டமிட்ட சதி என்றோ?, ஏற்க்கனவே புட்டப்பர்த்தி சாயி பாபா ஒருமுறை வீட்டிற்கு வந்தபோது இப்படி ஒரு பூஜையை யாருக்கும் தெரியாமல் செய்யச் சொன்னார் அதைத் தான் பகுத்தறிவு வழி நிறு செய்திருக்கிறார்கள் என்றோ?, நாளை கேள்வி-பதில் பாணி அறிக்கை வந்தால் ஆச்சரியம் இல்லை